ஆடைகளை மட்டும் சலவை செய்தால் போதாது
உங்கள் மனதையும் கொஞ்சம் சலவை செய்யுங்கள்.
எது பிழை!
என் கால்களா ?
இல்லை
உங்கள் பார்வையா ?
என் கனவுகளை மாற்ற சொல்லாதீர்கள்
உங்கள் மன நிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.
நான் வீழ்வதற்கென்று பிறந்தவன் அல்ல
வாழ்வதற்காக பிறந்தவன்.
இது முடிவல்ல
ஒரு புதிய துவக்கம்.